ஐசிசி 2024 கிரிக்கெட் விருதுகளுக்கான இறுதி பட்டியல் வெளியீடு: இலங்கை வீரர்கள் இடம்பிடித்தனர்!!
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ICC) 2024-ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் விருதுகளின் இறுதி பட்டியலை இன்று வெளியிட்டது. பல்வேறு பிரிவுகளில் உலக அளவிலான திறமையான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
ஆண்கள் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது
சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்காக ஹரி புரூக் (இங்கிலாந்து), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), டிராவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது
ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் விருதுக்கான இறுதி பட்டியலில் சாமரி அத்தபத்து (இலங்கை), அமெலியா கெர் (நியூசிலாந்து), அன்னாபெல் சதர்லேண்ட் (அவுஸ்திரேலியா), லாரா வால்வார்ட் (தென்னாபிரிக்கா) இடம்பிடித்துள்ளனர்.
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது
இருபுறத்திலும் சிறப்பாக செயல்பட்ட கமிந்து மெண்டிஸ் (இலங்கை) உட்பட ஹரி புரூக், ஜஸ்பிரித் பும்ரா, ஜோ ரூட் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆண் மற்றும் பெண் வீரர்கள்
ஆண்கள் பிரிவில் வனிந்து ஹசரங்க (இலங்கை), குசல் மெண்டிஸ் (இலங்கை) தேர்வாகினர்.
பெண்கள் பிரிவில் சாமரி அத்தபத்து, ஸ்மிருதி மந்தனா, அன்னபெல் சதர்லேண்ட் ஆகியோர் இடம்பிடித்தனர்.
டி20 பிரிவில் சிறந்தவர்கள்
ஆண்கள் பிரிவில் பாபர் அசாம், டிராவிஸ் ஹெட், சிக்கந்தர் ராசா, அர்ஸ்தீப் சிங் இடம்பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் சாமரி அத்தபத்து, அமெலியா கெர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் வீரர்கள்
கமிந்து மெண்டிஸ் (இலங்கை) ஆண்கள் பிரிவில் இடம்பிடித்தார், பெண்கள் பிரிவில் அன்னெரி டெர்க்சன் (தென்னாபிரிக்கா) மற்றும் சுரேயங்கா பட்டீல் (இந்தியா) ஆகியோர் தேர்வாகினர்.
2025 ஜனவரி இறுதியில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும், மேலும் இலங்கை வீரர்கள் முன்னணி இடங்களில் உள்ளதை ரசிகர்கள் பெருமிதத்துடன் வரவேற்றுள்ளனர்.
_Srilanka Tamil News_
0 Comments